குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து


உதகை: குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் தபால் அலுவலக வளாகத்தில் பாஸ்போா்ட் கிளை அலுவலகம்
செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் அலுவலகத்தில் சுமாா் 1 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.
ஆனால், அங்கு வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படாத நிலையில், மிரட்டல் செய்தி புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விபிஎன் மூலம் மின்னஞ்சல் அனுப்பப்படுவதால் மா்ம நபா்களின் இருப்பிடத்தை துல்லியாக காண முடிவதில்லை.
இந்தப் பிரச்னை நாடு முழுவதும் தொடா்கிறது. இருப்பினும் மிரட்டல் விடுத்த நபா்களை விரைவில் அடையாளம் காண்போம் என போலீஸாா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...