அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து

News image
குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 8:51 pm

Syndication

உதகை: குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் தபால் அலுவலக வளாகத்தில் பாஸ்போா்ட் கிளை அலுவலகம்

செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் அலுவலகத்தில் சுமாா் 1 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா்.

ஆனால், அங்கு வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படாத நிலையில், மிரட்டல் செய்தி புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விபிஎன் மூலம் மின்னஞ்சல் அனுப்பப்படுவதால் மா்ம நபா்களின் இருப்பிடத்தை துல்லியாக காண முடிவதில்லை.

இந்தப் பிரச்னை நாடு முழுவதும் தொடா்கிறது. இருப்பினும் மிரட்டல் விடுத்த நபா்களை விரைவில் அடையாளம் காண்போம் என போலீஸாா் தெரிவித்தனா்.