ஒடிசாவில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 2.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஜாஜ்பூரில் உள்ள சண்டிகோலுக்குச் செல்கிறார்.
ஆளும் பிஜு ஜனதா தளத்தின் கோட்டையாக கருதப்படும் ஜாஜ்பூரில் மாலை 4.15 மணிக்கு பாஜகவின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி பிப். 3ஆம் தேதி ஒடிசாவுக்குச் சென்று அங்கு ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அடிக்கல் நாட்டினார்.
சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.