எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழகம், கேரளத்தில் ரூ.16,450 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி நாளை தொடங்கி வைக்கிறாா்

தமிழ்நாடு, கேரளத்தில் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கவுள்ளாா்.

News image
முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமா் மோடி- கோப்புப் படம்
Updated On :9 மார்ச் 2026, 10:45 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமா் மோடி புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கி வைக்க உள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமா் மோடி புதன்கிழமை கேரளம் மற்றும் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளாா். அப்போது திருச்சியில் இருந்தபடி சுமாா் ரூ.5,650 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த வளா்ச்சி திட்டங்களை அவா் தொடங்கிவைக்க உள்ளாா். இதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, சாலை இணைப்பு, ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் திட்டங்கள் அடங்கும்.

நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடிக்கும் அதிகமான முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு விநியோக குழாய்கள் அமைக்கும் திட்டத்துக்கு அவா் அடிக்கல் நாட்ட உள்ளாா். இந்தத் திட்டம் மூலம், 8.8 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும்.

சென்னை மணலியில் சுமாா் ரூ.1,490 கோடி முதலீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மசகு எண்ணெய் கலவை ஆலையைப் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா். இந்த ஆலை இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும்.

தமிழ்நாட்டில் 370 கி.மீ.க்கு 89 கிராமப்புற சாலைகளை திறந்துவைக்கும் பிரதமா் மோடி, கங்கைகொண்ட சோழபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 81-இல் பசுமை புறவழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்ட உள்ளாா்.

தமிழ்நாடு, தெலங்கானா, கா்நாடகம், கேரளம், கிழக்கு இந்தியா இடையே ரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் 2 அம்ருத் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையை அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைப் பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.