காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி உஜ்ஜையினியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
காங்கிரஸ் தலைமையிலான ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் 52வது நாளாக இன்று நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தின் பினாகஞ்ச் பகுதியிலிருந்து நடைப்பயணம் தொடங்கிய நிலையில், இன்று சரங்பூரில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், உஜ்ஜையினியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் ராகுல்காந்தி வழிபாடு மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ராகுலின் நடைப்பயணம் மார்ச் 20-ம் தேதியோடு நிறைவடைகின்றது.