புதுதில்லி: தில்லி, திருவனந்தபுரம், மும்பை, அம்பாலா, சண்டிகர், மதுரை மற்றும் சென்னை ஆகிய 7 நகரங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலை என்ற போர்வையில் ரஷியா-உக்ரைன் போர் மண்டலத்திற்கு இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியதாக பல்வேறு விசா ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுவரை ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள், லேப்டாப், மொபைல், மின்னணு பதிவுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் சந்தேகப்படும் நபர்கள் பல்வேறு இடங்களில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இதுவரை சுமார் 35 நபர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.