சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு!

சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் எரிவாயு திட்ட மானியத்தை நீட்டிப்பதற்கு ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு திட்ட மானியத்தை ஒராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா யோஜனா பயனாளிக்கு எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 300 மானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மானிய திட்டத்திற்கு ரூ.12,000 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

கோப்புப்படம்
தேர்தல் பத்திர தகவல் தர கால அவகாசமா? ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

மேலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2024 முதல் அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com