தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த தகவல் தர பாரத ஸ்டேட் வங்கிக்கான நீதிமன்ற காலக்கெடு முடிவடைந்த நிலையில் வழக்கு தொடர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்), எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை கோரியுள்ளது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் சட்டவிரோதமானது எனக்கூறி தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை தடை செய்வதாக கடந்த பிப்.15ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு மத்தியில் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 4) கோரிக்கை விடுத்தது.
காலக்கெடு முடிவடைந்த நிலையில் எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மேற்கொள்ளுமாறு ஏடிஆர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
எஸ்பிஐ முன்வைத்துள்ள கோரிக்கையுடன் சேர்த்து இதனையும் விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கேட்டுள்ளார்.
வழக்கு விவரங்களை மின்னஞ்சலில் அனுப்புமாறும் இது தொடர்பாக ஆணை பிறப்பிப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்ததாக பூஷண் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்- எம். தமிமுன் அன்சாரி

ரூ.60,000 கோடி நிதி திரட்டும் எஸ்பிஐ
சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ரூ. 2.34 லட்சம் பறிமுதல் விவகாரம்: 10 போ் மீது வழக்கு!

எய்ம்ஸ் இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




