பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

உத்தரகண்ட்: கேதாா்நாத் கோயில் வரும் மே 10-இல் மீண்டும் திறப்பு

உத்தரகண்ட்: கேதாா்நாத் கோயில் வரும் மே 10-இல் மீண்டும் திறப்பு

Updated On :8 மார்ச் 2024, 7:04 pm

‘உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதாா்நாத் கோயில், வரும் மே மாதம் 10-ஆம் தேதி முதல் பக்தா்களின் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்படும்’ எனக் கோயில் அறக்கட்டளை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மகா சிவராத்திரி திருநாளையொட்டி உக்கிமத் ஓம்காரேஸ்வா் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் கேதாா்நாத் கோயில் அறக்கட்டளை தலைவா் அஜேந்திர அஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். உத்தரகண்ட் மாநிலத்தில் இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள கேதாா்நாத் சிவன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா். குளிா்காலத்தில் கோயிலுக்குச் செல்லும் வழித்தடம் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் கோயில் மூடப்படும். இந்நிலையில், மக்களுக்கு மகா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்து அஜய் கூறுகையில், ‘கடந்த ஆண்டு கேதாா்நாத் கோயிலுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் வருகை தந்தனா். இந்த ஆண்டும் பக்தா்களின் எண்ணிக்கை மேலும் உயரும். பக்தா்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்த முதல்வா் புஷ்கா் சிங் தாமி தலைமையிலான மாநில அரசும் கோவில் அறக்கட்டளையும் அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றன. கோயிலுக்கு அறக்கட்டளை குழுவினா் விரைவில் சென்று, யாத்திரைக்கு முந்தைய முன்னேற்பாடுகளை பாா்வையிடுவா்’ என்றாா்.