மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மத்தியப் பிரதேச தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து!

தலைநகர் போபலில் உள்ள தலைமைச் செயலகத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

News image
விபத்து ஏற்பட்ட தலைமைச் செயலகம்
Updated On :9 மார்ச் 2024, 8:52 am

DIN

மத்தியப் பிரதேசம், போபாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தலைநகர் போபலில் உள்ள தலைமைச் செயலகத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த 15 முதல் 20 வரை தீயணைப்பு வாகனங்கள் விரைந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதல்வர் மோகன் யாதவ் நிலைமையை ஆய்வு செய்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், ஆவணங்களும் முக்கியமான கோப்புகளும் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.