நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமித் ஷாவுடன் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மீண்டும் சந்திப்பு!

மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை

News image

அமித் ஷாவுடன், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் சந்திப்பு

Updated On :9 மார்ச் 2024, 10:00 am

DIN

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேசிய தலைநகரில் சந்தித்துப் பேசினார்கள்.

மூன்றாவது நாளாக தேசிய தலைநகரில் முகாமிட்டுள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் அமித் ஷாவுடன் அவரது இல்லத்தில் மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக மார்ச் 7-ம் தேதி இரவு அமித் ஷா, ஜெ.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், இது இவர்களின் இரண்டாவது சந்திப்பாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(என்டிஏ) சேருமாறு தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2018-ல் ஜனநாயகக் கூட்டணியின் உறவை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி விரைவில் அந்த கட்சியில் சேரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.