மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்த பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை இன்று (மார்ச் 11) மாலை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக தேசியச் செயலாளர் ஜெ.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
பாஜகவில் முதல்கட்டமாக 195 வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. அதனைத் தொடர்ந்து எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
மாநிலங்களில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலையும் மத்திய தேர்தல் குழு இறுதி செய்யவுள்ளது.