ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்திின் நெருங்கிய நண்பர் அமித் கத்யால் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டை விசாரித்து வரும் அமலாக்கத்துறையினர், அந்த வழக்குத் தொடர்புடைய பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே பணி பெற்று தர மத்திய அமைச்சராக இருந்த லாலு சார்பாக லஞ்சமாக நிலம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமித் கத்யால் கடந்த நவம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
தற்போது, பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் கிருஷ்ணா பில்டுடெக் பிரைவேட் லிமிடட் தொடர்புடைய 27 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்யாலின் தெற்கு தில்லியில் உள்ள ஏகே இன்போ சிஸ்டத்தின் அலுவலக்ம் தேஜஸ்வி யாதவின் குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை 31-ல் அமலாக்கத்துறையால் ராஷ்டிரீய கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் ரூ.6.02 கோடி மதிப்புடைய ஆறு அசையா சொத்துகள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.