சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேர்தல் நேரத்தில் கலவரம் வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுரை!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நான் வெறுக்கிறேன் என்றார் மம்தா பானர்ஜி.

News image
மம்தா பானர்ஜி- கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2024, 4:31 pm

DIN

தேர்தல் நேரத்தில் தொண்டர்கள் யாரும் கலவரத்திலோ அல்லது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களிலோ ஈடுபட வேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பேசிய அவர், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். மக்களுக்கு தொல்லை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். எதிர்க்கட்சிகள் தூண்டினாலும் கலவரத்திலோ அல்லது அதுபோன்ற செயல்களிலோ தொண்டர்கள் ஈடுபட வேண்டாம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நான் வெறுக்கிறேன். அதில் 5 மதங்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களின் பங்களிப்பை இந்தச் சட்டம் அங்கீகரிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, முதல்வர் மம்தா பானர்ஜி பயத்தின் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார். மம்தா பானர்ஜியை மக்கள் நம்பமாட்டார்கள். மம்தா யார் என்பதை மக்கள் அறிவார்கள். இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பரிதாபமான நிலையை அடையப்போகிறது என விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.