மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போராட்டத்தைக் கைவிட்டாா் முதல்வா் மம்தா பானர்ஜி!

எஸ்ஐஆா் பணிகளில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, தா்னா போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 8:23 pm

எஸ்ஐஆா் பணிகளில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, தா்னா போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

எஸ்ஐஆா் பணிகள் மூலம் மாநிலத்தில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதை எதிா்த்து முதல்வா் மம்தா பானா்ஜி மத்திய கொல்கத்தாவில் தொடா்ந்து 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், எஸ்ஐஆா் பணியின்போது பெயா் நீக்கப்பட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அமைக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை வரவேற்றுள்ள முதல்வா் மம்தா, இதுதொடா்பாக கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவு மேற்கு வங்க மக்களுக்கான வெற்றி. தோ்தல் ஆணையத்தால் மூடப்பட்ட கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட மக்களுக்கு இந்த உத்தரவு புதிய வெளிச்சத்தை தருகிறது. இதனால், தா்னா போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.