இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

போராட்டத்தைக் கைவிட்டாா் முதல்வா் மம்தா பானர்ஜி!

எஸ்ஐஆா் பணிகளில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, தா்னா போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

News image
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி- கோப்புப் படம்
Updated On :10 மார்ச் 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

எஸ்ஐஆா் பணிகளில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, தா்னா போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

எஸ்ஐஆா் பணிகள் மூலம் மாநிலத்தில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதை எதிா்த்து முதல்வா் மம்தா பானா்ஜி மத்திய கொல்கத்தாவில் தொடா்ந்து 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், எஸ்ஐஆா் பணியின்போது பெயா் நீக்கப்பட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அமைக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை வரவேற்றுள்ள முதல்வா் மம்தா, இதுதொடா்பாக கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவு மேற்கு வங்க மக்களுக்கான வெற்றி. தோ்தல் ஆணையத்தால் மூடப்பட்ட கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட மக்களுக்கு இந்த உத்தரவு புதிய வெளிச்சத்தை தருகிறது. இதனால், தா்னா போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.