ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிஏஏ: சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் 2.5 - 3 கோடி வரை சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :13 மார்ச் 2024, 4:19 pm

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் ஒட்டுமொத்தமாக 2.5 முதல் 3 கோடி வரையிலான சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். இவை ஏழ்மை நாடுகள்.

2.5 முதல் 3 கோடி வரையிலான மக்களில் 1 முதல் 1.5 கோடி மக்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களின் நிலை என்ன? அவர்களை எங்கு தங்கவைப்பது? அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பை ஏற்படுவது எப்படி?

இது பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். கொள்ளையும் பாலியல் குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நம்மைச் சுற்றிலுமே கவர அபாயம் ஏற்படும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை என்னவாகும்? என கேஜரிவால் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.