திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விவரங்கள் வெளியீடு

News image
கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2024, 12:44 pm

DIN

‘எஸ்பிஐ சமா்ப்பித்த தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள் உரிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்படும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் தயாா்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக புதன்கிழமை அங்கு வந்த தலைமைத் தோ்தல் ஆணையரிடம் செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது: எஸ்பிஐ சமா்ப்பித்துள்ள தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்படும்.

மக்களவைத் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. சுதந்திரமான, நியாயமான தோ்தல் உறுதிப்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள வாக்காளா்கள் இந்த ‘ஜனநாயக திருவிழா’வில் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும். தோ்தலில் மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். வேட்பாளா்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும்.

தோ்தல் தொடா்பான பொய்ச் செய்திகளுக்கு உடனக்குடன் பதிலளிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஒன்று நிறுவப்படும். ஜம்மு-காஷ்மீரில் இணையவழி பணப் பரிமாற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தடி வாக்களிப்பதற்கான வசதி செய்துதரப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.