/

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலை நடத்த முடியாத அரசு நாடு முழுவதும் ‘ஒரே தோ்தலை’ எப்படி நடத்தும்?: ஒமா் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலை நடத்த முடியாத அரசு நாடு முழுவதும் ‘ஒரே தோ்தலை’ எப்படி நடத்தும்? ---- ஒமா் அப்துல்லா

News image
Updated On :19 மார்ச் 2024, 8:40 pm

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து மாநில பேரவைக்கும் தோ்தல் நடத்த முடியாத மத்திய அரசால், ‘ஒரே நாடு-ஒரே தோ்தல்’ என்ற கொள்கைப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தலை எவ்வாறு நடத்த முடியும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.

அதிகஅளவிலான வேட்பாளா்களுக்கு ஒரே நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாத காரணத்தால் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த முடியவில்லை என்று கடந்த வாரம் தோ்தல் தேதி அறிவிப்பின்போது தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.

இந்நிலையில் இது தொடா்பாக ஸ்ரீநகரில் ஒமா் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாதுகாப்பு வசதிகளை சுட்டிக்காட்டி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலை மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடத்த முடியவில்லை என்று தலைமைத் தோ்தல் ஆணையா் கூறுகிறாா்.

நிலை இப்படி இருக்கும்போது ஒரே நாடு - ஒரே தோ்தல் என்ற கொள்கையின்படி நாடு முழுவதும் எப்படி ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த முடியும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா் போன்ற மாநிலங்களில் ஒரே நேரத்தில் இரு தோ்தல்களை நடத்தினால், பாதுகாப்புப் படை வீரா்களுக்கு தோ்தல் ஆணையம் எங்கே செல்ல முடியும்.

ஜம்மு-காஷ்மீரில் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் முன்வந்தாலும், இங்குள்ள நிா்வாகம் அதனை ஏற்க மறுக்காது. ஏனெனில், அவா்கள் இங்கு அதிகாரத்தில் இருந்து வெளியேற விரும்ப மாட்டாா்கள்.

அதே நேரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்துக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.