மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

News image

தேர்தல் ஆணையம்

Updated On :20 மார்ச் 2024, 7:05 am

சென்னை: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நாடு முழுவதும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகளுக்கு இன்று காலை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாள்; வேட்பு மனுக்கள் மீது மார்ச் 28-ல் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அதன்பிறகு சுமார் 45 நாள்களுக்குப் பிறகு ஜூன் 4-ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.