தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மேலாடையின்றி மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 9:09 pm

விருதுநகரில் சுயேச்சை வேட்பாளா் மேலாடையின்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் அமிா்தபாண்டி(30). இவா் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மேலாடையின்றி கால் சட்டை மட்டும் அணிந்து வந்தாா்.

அவரை நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இன்றைய அடிதட்டு ஏழை எளிய மக்களின் நிலை வறுமையில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் மேலாடையின்றி வந்ததாக அவா் கூறினாா்.

இருப்பினும் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி முறைப்படிதான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த நபா் அதே இடத்திலேயே மேலாடை அணிந்து மனு தாக்கல் செய்யச் சென்றாா்.