தொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கேஜரிவால் கைது: பிஆர்எஸ் தலைவர் கே டி ராமாராவ் கண்டனம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு பிஆர்எஸ் செயல் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனுமான கே டி ராமாராவ் கண்டனம்

Published On :

ஹைதராபாத்: கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு பிஆர்எஸ் செயல் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனுமான கே டி ராமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையின் இத்தகைய அடக்குமுறைகள் வன்மையான கண்டத்துக்குறியது.

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜகவின் கைகளில் "அடக்குமுறையின் முக்கிய கருவிகளாக" மாறிவிட்டன என்று ராமாராவ் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசியல் எதிரிகள் ஆதாரமற்ற காரணங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல் மட்டுமே அவர்களின் ஒரே நோக்கம்" என்று ராமாராவ் தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், ராமா ராவின் சகோதரியான பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா, அமலாக்கத் துறையினா் ஹைதராபாதில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், தில்லி கலால் கொள்கையில் நடந்த மோசடியில் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் பிஆர்எஸ் எம்எல்சி

கவிதாவுக்கு பிணை வழங்க வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.