சிறையில் இருந்தாலும் தேசத்திற்கு சேவை செய்வேன் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை இயக்குநரகம் கைது செய்துள்ளது. 9 முறை அழைப்பாணை: இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு இதுவரை ஒன்பது முறை அழைப்பாணைகளை அமலாக்கத் துறை அனுப்பியது.
அது சட்டவிரோதம் என்று கூறி அவா் ஆஜராகாமல் இருந்து வந்தாா். தொடா்ந்து முதல்வா் கேஜரிவால் வியாழக்கிழமை (மாா்ச் 21) கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் ஏற்கெனவே துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் சில அதிகாரிகள் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை அழைத்து சென்றபோது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அளித்த பேட்டியில், நான் உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, எனது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.