வெங்காய ஏற்றுமதிக்கான தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்காக அதிகரித்து வருவது, சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. நுகா்வோரின் சிரமத்தைப் போக்கும் விதமாக, விலை உயா்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி தடை விதித்தது. மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் நீட்டித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) சனிக்கிழணை அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘வெங்காய ஏற்றுமதிக்கு மாா்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டபோதும், மத்திய அரசின் அனுமதியின் பேரில், நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தொடர்புடையது

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

ஏற்றுமதி இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் முறை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

