திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தலைநகர் தில்லியில் உள்ள நரேலா பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையில் இன்று(மார்ச். 24) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image

படம் | பிடிஐ

Updated On :24 மார்ச் 2024, 3:58 pm IST

தலைநகர் புதுதில்லியில் உள்ள நரேலா பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையில் இன்று(மார்ச். 24) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென பரவியதால் தொழிற்சாலை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. 20க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Story image

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், முழுமையாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.