தலைநகர் தில்லியில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து நிலவியது.
மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 10.30 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது.
இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்று தில்லி தீயணைப்புத்து றையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 20 நிமிடங்கள் ஆனதாகவும், இது குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.