புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

புதிய உச்சமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது.
42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.312 உயர்வு!
42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.312 உயர்வு!

சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. இதனால், இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை, கடந்த வாரம் ரூ. 50,000-ஐ நெருங்கி மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயா்ந்து புதிய உச்சமாக ரூ.51,120-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை நேற்று ரூ.6,250க்கு விற்பனையான நிலையில், இன்று 140 ரூபாய் உயர்ந்து ரூ.6,390க்கு விற்பனையாகிறது.

கடந்த திங்கள்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.49,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ. 49,600-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ. 6,215-க்கும், சவரனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ. 49,720-க்கும் விற்பனையானது. வியாழக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ. 50,000-க்கு விற்பனையானது. இன்று புதிய உச்சமாக ரூ.51,120 ஐ தொட்டுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயா்ந்து ரூ.80.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ.80,800-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com