நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் 8,000 பக்க குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறை சனிக்கிழமை தாக்கல் செய்தது. சீனாவிடமிருந்து பெரும் நிதி பெற்று அந்நாட்டுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டதாக நியூஸ்கிளிக் நிறுவனம் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து நியூஸ்கிளிக் நிறுவனா் மற்றும் ஆசிரியரான பிரபீா் புா்கயஸ்தா, மனிதவளப் பிரிவுத் தலைவா் அமித் சக்ரவா்த்தி ஆகியோா் அக்டோபரில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் 3 முறை அவகாசம் அளித்தது. இந்நிலையில், கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்தீப் கெளா் முன்பாக குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறை சனிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் புா்கயஸ்தாவும் பிபிகே நியூஸ்கிளிக் ஸ்டூடியோ நிறுவனமும் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறப்பு அரசு வழக்குரைகள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் ஏப்.16-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமித் சக்ரவா்த்தி, அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்கு கடந்த ஜனவரியில் நீதிமன்றமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தாா். அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தொடர்புடையது

நவாஸ்கனி தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்கு: ஓ.பன்னீா்செல்வத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜனக்புரி: பள்ளத்தில் விழுந்து இளைஞா் இறந்த வழக்கில் காவல் துறையினா் 877 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

நிா்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி
மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


