மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கேரள மதரசா ஆசிரியா் கொலை வழக்கு: ஆா்எஸ்எஸ் அமைப்பினா் விடுவிப்பு

கேரள மதரசா ஆசிரியா் கொலை வழக்கு: ஆா்எஸ்எஸ் அமைப்பினா் விடுவிப்பு

Updated On :30 மார்ச் 2024, 10:15 pm

கேரளத்தில் மசூதிக்குள் மதரசா ஆசிரியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆா்எஸ்எஸ் அமைப்பினா் மூவா் விடுவிக்கப்பட்டனா். காசா்கோடு மாவட்டம், சூரியில் முகைதீன் ஜும்மா மசூதி உள்ளது. மசூதி வளாகத்தில் உள்ள மதரசாவில் ஆசிரியராக இருந்தவா் முகமது ரியாஸ் மெளலவி (34). 2017-ஆம் ஆண்டு மாா்ச் 20-ஆம் தேதி இவா், மசூதி வளாகத்தில் உள்ள அவரது அறைக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக கெலுகுடே பகுதியைச் சோ்ந்த ஆா்எஸ்எஸ் அமைப்பினா் அகிலேஷ், ஜிதின், அஜேஷ் ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு காசா்கோடு முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது 97 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனா். குற்றப்பத்திரிகையில் மொத்தம் 260 ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் இந்தக் கொலை நடந்ததாக குற்றப்பத்திரிகையில் போலீஸாா் தெரிவித்திருந்தனா். இந்த வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி கே.கே.பாலகிருஷ்ணன், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா். தீா்ப்பு குறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் சி.சுகுமாா் கூறுகையில், முகமது ரியாஸ் கொலை வழக்கில் வலுவான ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்படாமல் ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.