முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இன்று அயோத்தி ராமர் கோவிலில் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்கிறார்.

News image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Updated On :1 மே 2024, 12:40 pm IST

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று முதல் முறை வருகை தருகிறார். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’குடியரசுத் தலைவர், ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீ ராமர் கோயில் மற்றும் குபேர் டீலாவில் தரிசனமும், சரயு பூஜை மற்றும் ஆரத்தியும் செய்வார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக, இன்று அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ”500 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து மக்கள் இங்கு தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோவில் விவகாரத்தில் அரசியல் செய்வோரிடம் அதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திரௌபதி முர்மு இந்த நாட்டின் குடியரசுத் தலைவரானது எதிர்க் கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. காங்கிரஸ் தொடர்ந்து தேர்தலில் இது தொடர்பான பொய்களைப் பரப்பி வருகிறது. நமது குடியரசுத் தலைவருக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர்களுக்கு ’பிரான பிரதிஷ்டை’ அழைப்பிதழ் அனுப்பப்பட்டது குறித்து அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டபோது ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலப்பட்டன” என்றார்.

ஜனவரி 22 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோவிலுக்கு அனைத்துத் துறை பிரபலங்களும் கலந்துகொண்ட போது, குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.