பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

அரவிந்தர் சிங் லவ்லியுடன், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜ்குமார் சௌகான், நசீப் சிங், நீரஜ் பசோயா மற்றும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அமித் மல்லிக் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அரவிந்த் சிங் தனது ராஜிநாமா கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸின் முடிவில் தனக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் காங்கிரஸில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்டத்தின் போது, ​​தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com