பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

News image
Updated On :5 மே 2024, 3:20 pm

DIN

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிபிஎஸ்இ பத்து மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வினை இந்தியாவில் 39 லட்சம் பேர் எழுதியருக்கிறார்கள்.

தமிழகத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) வெளியாகவுள்ளன. இந்த நிலையில், சிபிஎஸ்இ பத்து மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதில் தான் உள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தே மாணவர்கள் தங்களது அடுத்தக்கட்ட பட்டப்படிப்புகள் குறித்து முடிவெடுக்க இயலும் என்பதால் இந்த தேர்வு முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

வழக்கமாக சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த ஆண்டும் அவ்வாறே வெளியாகும் என்றும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் சிபிஎஸ்இ தரப்பில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கடந்த ஒரு சில ஆணடுகளாக சிபிஎஸ்இ 12 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை ஒரே நாளில் வெளியிட்டு வருகிறது.கடந்த 2023ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகியிருக்கிறது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், மே 20ஆம் தேதிக்கு பின் வெளியிடப்படும் என கடந்த இரு நாள்களுக்கு முன் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) வெளியாகவுள்ள நிலையில், சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன் கூட்டியே வெளியாகுமா என்ற சந்தேகம் பெற்றோர், மாணவர்கள் மத்தியில் எழுந்த நிலையில், மே 20ஆம் தேதிக்கு பின் சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cbse.nic.in , cbseresults.nic.in , results.cbse.nic.in , digilocker.gov.in , results.gov.in , ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.