பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்
Published on
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: தொலைபேசி ஒரு நோயாக மாறியுள்ளதாகவும், இனி பள்ளிகளுக்குள் ஆசிரியர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராஜஸ்தான் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால உத்தரவுகளை செயல்படுத்த கல்வித் துறை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இது பள்ளியின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருக்கும்.

பிரார்த்தனை செய்வதாக கூறி எந்த ஆசிரியரும் பள்ளியை விட்டு வெளியேறக்கூடாது. அவ்வாறு செய்ய விரும்பினால், விடுப்பைப் பெற்று அதை பதிவேட்டில் பதிவு செய்யலாம். இதற்கு முன் விடுப்பு விண்ணப்பம் இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறிய ஆசிரியர்கள் இடைநீக்கம் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்குள் யாரும் தொலைபேசியை எடுத்துச் செல்ல கூடாது. அவ்வாறு தவறுதலாக எடுத்துச் சென்றாலும், அதை பள்ளி முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும். தொலைபேசி ஒரு நோயாக மாறிவிட்டது. பள்ளி ஆசிரியர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் பங்குச் சந்தையை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். வேறு என்னென்ன விஷயங்களைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

இனி பள்ளி முதல்வர் மட்டுமே தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். இதன் மூலம் மாணவர்களின் கல்வி இழப்பு தவிர்க்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com