ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த திங்கள்கிழமை குல்கம் மாவட்டம் ரெட்வனி பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இதேபோல, கதுவா மாவட்டத்தில் கடந்த மே 1 ம் தேதி பயங்ரவாதிகளுடனான தாக்குதலில் கிராம பாதுகாப்பு அலுவலர் கொல்லப்பட்டார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 29 ம் தேதி 2 தீவிரவாத அமைப்புகள் எல்லைகள் வழியாக ஊடுருவியிருப்பதாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஆனந்த் ஜெயின் கூறியிருந்தார்.