இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவந்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களை லட்சாதிபதியாக்குவோம், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
சாய்பாஸா பகுதியில் உள்ள டாடா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பேசிய எம்.பி. ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஜோபா மஞ்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, பழங்குடியினர், ஏழைகள், பின்தங்கியவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கான தேர்தலாகும் இது. அரசியலமைப்பையே பாஜக அழிக்க நினைக்கிறது என்றும் ராகுல் கூறினார்.
நமது நாட்டின் நீர், நிலம், காடு என அனைத்தையும் 14 - 15 தொழிலதிபர்களுக்கே வழங்கிவிட வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை 50 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்துவோம். ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின முதல்வர் ஹேமந்த் சோரனை பாஜக சிறையில் அடைத்துள்ளது. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
பிற்பகல் 2 மணியளவில், கும்லாவின் பசியா பகுதியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிரேட் நிகோபார் என்பது திட்டமல்ல; மிகக் கொடிய குற்றம்! ராகுல் காந்தி

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் எச்சரிக்கை

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



