ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

தெலங்கானா அமைச்சர் அதிரடி: 25 பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர்க்கை!

News image
தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி- IANS
Updated On :8 மே 2024, 4:05 pm

DIN

பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் ஜூன் 5-ம் தேதி காங்கிரஸில் இணைவார்கள் எனத் தெலங்கானா மாநில அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அவர், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் பிஆர்எஸ் கட்சி, மக்களவை தேர்தலில் 2 இரண்டு தொகுதிகளுக்கு மேல் பெறாது எனவும் தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சி மீது நம்பிக்கையிழந்து 25 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2023 தேர்தலில் பிஆர்எஸ் கட்சியிடமிருந்து தெலங்கானா மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் அரசின் அமைச்சர் வெங்கட் ரெட்டி, தன்னிடம் பிஆர்எஸ் கட்சியின் எம்.பி. வேட்பாளர்கள் 6 பேர் ஏற்கெனவே காங்கிரஸில் இணைவதைக் குறித்து கேட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய காங்கிரஸ் கமிட்டி தங்களுக்கென கொடுத்த இலக்கான 15 தொகுதிகளில் நிச்சயம் 12 தொகுதிகளை தெலங்கானாவில் வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மே 13-ம் தேதி 4-ம் கட்டத் தேர்தலில் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜுன் 4-ம் தேதி நடக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.