நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

மக்களவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு!
கான்பூரில் இவிஎம் இயந்திங்களோடு வாக்குச் சாவடி அதிகாரிகள்
கான்பூரில் இவிஎம் இயந்திங்களோடு வாக்குச் சாவடி அதிகாரிகள்ANI
Published on
Updated on
1 min read

மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஸாவின் சட்ட பேரவைத் தேர்தலும் நாளை (மே 13) நடைபெறுகிறது

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கவுள்ளது.

இந்த 96 தொகுதிகளில் 2019 தேர்தலில் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் 11 தொகுதிகளிலும் ஆளும் பாஜக கூட்டணி 47 இடங்களிலும் வெற்றி பெற்றது.

பாஜக 42 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் 6-க்கும் குறைவான தொகுதிகளைப் பெற்றது.

பிராந்திய கட்சிகளான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் பிஆர்எஸ் கட்சி 9 இடங்களிலும் ஓவைசியின் கட்சி மற்றும் பிஜு ஜனதா தளம் தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணி 40.34 சதவிகித வாக்கும் இந்தியா கூட்டணி 23.73 சதவிகித வாக்கும் (தேசியவாத மற்றும் சிவசேனை கட்சிகள் தவிர்த்து) இந்த தொகுதிகளில் பெற்றன.

திங்கள்கிழமை 90 தொகுதிகளுக்கான போட்டியில் 1,717 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி 92 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. பாஜக 70, காங்கிரஸ் 61 மற்றும் ஓய்எஸ்ஆர் கட்சி 25 இடங்களிலும் போட்டியிடுகிறது.

தெலங்கானா- 17, ஆந்திர பிரதேசம்-25, மத்திய பிரதேசம்- 8, உத்தரப் பிரதேசம்- 13, மகாராஷ்டிரா- 11, மேற்கு வங்கம்-8, பிஹார்-5, ஜார்க்கண்ட்- 4, ஒடிசா- 4 மற்றும் ஜம்மு காஷ்மீர்- 1 ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

நான்காம் கட்டம் முடிவுற்றால் ஒட்டுமொத்தமாக 379 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துவிடும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com