தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

மும்பையில் 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

News image

படம் | பிடிஐ

Updated On :14 மே 2024, 3:38 am

மும்பையில் திங்கள்கிழமை கடுமையான புழுதிப் புயல் வீசியது, புழுதிப் புயலுடன் கூடிய மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலமாக வீசிய சூறைக்காற்றும் வீசியது.

40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில், பலமாக வீசிய சூறைக்காற்றில் செட்டாநகர் சந்திப்பில் கட்கோபார் பகுதியில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 100 அடி உயர விளம்பரப் பதாகை ஒன்று சரிந்து விழுந்ததில் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரப் பலகை இரும்புக் கம்பிகளை வைத்துக் கட்டப்படிருந்ததால், விழுந்த வேகத்தில் கீழே இருந்தவா்களை நசுக்கியது.தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் 3 போ் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் 11 பேர் உயிரிழந்ததாக இன்று(மே.14) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்டோா் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.