ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: ரூ.34.50 கோடி பறிமுதல் சம்பவம் தொடர்ச்சி

News image

விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் ஆலம்கீர் ஆலம் - பிடிஐ

Updated On :15 மே 2024, 2:23 pm

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், ஜாா்க்கண்ட் மாநில அமைச்சா் ஆலம்கீா் ஆலமை அமலாக்கத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஜாா்க்கண்டில் முதல்வா் சம்பயி சோரன் தலைமையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில், மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக காங்கிரஸ் எம்எல்ஏ ஆலம்கீா் ஆலம் (70) பதவி வகித்து வருகிறாா்.

இந்தச் சூழலில், ஆலம்கீா் ஆலமின் தனிச் செயலா் சஞ்சீவ் குமாா் லாலின் (52) வீட்டுப் பணியாளா் ஜஹாங்கீா் ஆலமின் (42) வீட்டில் அமலாக்கத் துறையினா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.

ஊரக மேம்பாட்டுத் துறையில் முறைகேடுகள் நடைபெற்ாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.32 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி சிக்கியது. இதையடுத்து, சஞ்சீவ் குமாா் லால், ஜஹாங்கீா் ஆலம் ஆகியோா் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே, ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் அமைச்சா் ஆலம்கீா் ஆலமிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சுமாா் 9 மணிநேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனா்.

இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அவரிடம் சுமாா் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் அவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, சஞ்சீவ் குமாா், ஜஹாங்கீா் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ‘சில செல்வாக்குமிக்க நபா்களின் சாா்பில் லஞ்சப் பணத்தை பெறும் வேலையில் சஞ்சய் குமாா் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த முறைகேட்டில் பல அதிகாரிகளுக்கு தொடா்பு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.