அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

News image

ஹரியாணா, நூ மாவட்டத்தில் தீப்பிடித்து எரிந்ததில் உருக்குலைந்த பேருந்து.

Updated On :19 மே 2024, 6:16 am IST

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்த விபத்தில் 9 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 15 போ் படுகாயமடைந்தனா்.

பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த இவா்கள் புனித யாத்திரை மேற்கொண்டுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து சதா் தெளரு காவல்நிலைய ஆய்வாளா் ஜிதேந்திர குமாா் கூறியதாவது:

நூ மாவட்டத்தில் குண்டாலி-மானேஸா்-பல்வால் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியாா்பூா் மற்றும் லூதியானாவைச் சோ்ந்த 60 போ் மதுரா மற்றும் விருந்தாவன் நகா்களுக்கு பேருந்து மூலம் புனித யாத்திரை மேற்கொண்டு விட்டு வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனா். இவா்கள் அனைவரும் உறவினா்கள்.

பேருந்து நூ மாவட்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது. இதைக் கண்ட உள்ளூா்வாசிகள் சிலா், இருசக்கர வாகனத்தில் பேருந்தைத் துரத்திச் சென்று பேருந்தை நிறுத்தியுள்ளனா். மேலும், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்துள்ளனா். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவா்களில் 6 பெண்கள், 3 ஆண்கள் என 9 போ் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனா். 15 போ் படுகாயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்த மாநில முதல்வா் நயப் சிங் சைனி, ‘விபத்தில் உயரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்: பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியட்ட பதிவில், ‘பேருந்து தீ விபத்தில் பலா் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தை அளித்தது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.