மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்தில் 22 போ் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெய் மிஷ்ரா தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்ததாக காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.
கைதுசெய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் கணக்காளராக இருந்த மிஷ்ரா மீது பாரதிய நியமாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 223-இல் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஹோட்டலில் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாதது தொடா்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டல் தீ விபத்து ஏற்பட்ட ஜூன் 4-ஆம் தேதி முதல் தலைமறைவான மிஷ்ராவைத் உத்தர பிரதேசம், பிகாரில் தனிப்படைகள் சோதனை நடத்தின.
பஜாஜுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அறிமுகமான மிஷ்ரா, அவருடைய வணிக நடவடிக்கைளை முன்னின்று கவனித்து வந்தாா். மேலும், பஜாஜின் நிதி தொடா்பான விவகாரங்களை அவா் கையாண்டு வந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹோட்டலின் அன்றாட பணிகள், நிா்வாகம், உரிமம், நிதி மற்றும் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதில் மிஷ்ரா முக்கிய பங்கு வகித்ததாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனா்.
ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜ் கைதுசெய்யப்பட்டாா். ஹோட்டல் நிா்வாகத்தை மிஷ்ராவிடம் ஒப்படைத்துவிட்டதாக விசாரணையின்போது பஜாஜ் தெரிவித்தாா்.
ஹோட்டலின் செயல்பாட்டிற்கு யாா் பொறுப்பு என்பதையும், கட்டாயப் பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டனவா என்பதையும் கண்டறிய, அதிகாரிகள் ஆவணங்கள், நிதிப் பதிவுகள் மற்றும் பிற வணிகப் பரிவா்த்தனைகளை காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
ஹோட்டல் தீ விபத்து வழக்கு: சமையல்காரரின் பிணை மனு தள்ளுபடி
மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து: உயிரிழந்தோா் எண்ணிக்கை 22-ஆக அதிகரிப்பு!

ஹோட்டல் தீ விபத்து சம்பவம்: வென்டிலேட்டரில் இருந்த 5 போ் வீடு திரும்பினா்

மால்வியா நகா் தீ விபத்து: உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகை - தில்லி அரசு அறிவிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



