ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி. மாயம்: போலீஸ் தேடுதல் நடவடிக்கை

கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி. மாயம் - போலீஸ் தேடுதல் நடவடிக்கை

News image

அன்வருல் அஸிம் அனாா்

Updated On :21 மே 2024, 8:56 pm

Din

கொல்கத்தா: மேங்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவுக்கு வந்த வங்கதேச எம்.பி. அன்வருல் அஸீம் அனாா், சில தினங்களுக்கு முன் மாயமானாா். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் அவரை தேடி வருகின்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல், கொல்கத்தாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 12-ஆம் தேதி வந்தாா். பாராநகா் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த அவா், யாரையோ சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டிலிருந்து சென்றுள்ளாா். அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதுகுறித்து, காவல்துறையில் அவரது நண்பா் புகாரளித்தாா்.

கடந்த 8 நாள்களாக அன்வருல் குறித்த எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. அதேநேரம், அவா் தில்லிக்கு செல்வதாக அவரது கைப்பேசியில் இருந்து குடும்பத்தினருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. அவரது இருப்பிடம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.