தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

News image
நரேந்திர மோடி
Updated On :22 மே 2024, 5:16 pm

DIN

பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டர்.

மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய அவர்,

400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமையவுள்ளதை 5ஆம் கட்டத் தேர்தல் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு எந்தவகையிலும் பயணளிக்கப்போவதில்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கு வளர்ந்த இந்தியாவை உறுதி செய்யும்.

காங்கிரஸ் கட்சி நாளொன்றுக்கு 12 கிலோமீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைத்தது. பாஜக நாளொன்றுக்கு 30 கிலோமீட்டருக்கு அமைத்தது. 60 ஆண்டுகால ஆட்சியில் 70 விமான நிலையங்களை காங்கிரஸ் உருவாக்கியது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 70 புதிய விமான நிலையங்களை பாஜக கட்டமைத்தது.

60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் 380 மருத்துவக் கல்லூரிகள். பாஜகவின் 10 ஆண்டுகள் ஆட்சியில் 325 மருத்துவக் கல்லூரிகளை கட்டியுள்ளது.

அவர்களின் ஆட்சியில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தற்போது நாட்டில் 22க்கும் அதிகமான எய்ம்ஸ் உள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் 25% மக்களுக்கு மட்டுமே குடிநீர் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் 75% வீடுகள் குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன.

உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது. நாடு முழுவதும் 1.25 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஒருலட்சம் கோடிக்கும் மேலான பாதுகாப்பு தளவாட உற்பத்தி நடைபெறுகிறது.

வங்கிகள் ரூ. 3 லட்சம் கோடிக்கும் மேலாக லாபம் ஈட்டுகின்றன.

மேற்கு வங்கத்தில் 2010க்கு பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏனெனில் வாக்கு வங்கிக்காக மாநிலத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஓபிசி சான்றிதழை மம்தா அரசு வழங்குகிறது. மம்தாவின் சந்தர்பவாத அரசியல் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது.

நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை என்கிறது திரிணமூல் காங்கிரஸ். இவர்கள், இஸ்லாமிய வக்ஃபு வாரியங்களுக்கு நிலங்களைக் கொடுத்துவிட்டு மாறாக அவர்களிடமிருந்து வாக்குகளைக் கேட்கின்றனர் என விமர்சித்தார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.