ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

இந்திய இணையவழி குற்றங்கள் அதிகரிப்புக்கு தென் கிழக்கு ஆசியாவின் சட்டவிரோத குழுக்கள் காரணம்: மத்திய அரசு

Published On :23 மே 2024, 1:58 am IST

இந்தியாவில் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகள், ஏடிஎம் காா்டு மோசடிகள் ஆகியவற்றுக்கு தென் கிழக்கு ஆசியாவின் பிராந்திய நாடுகளில் செயல்படும் சட்ட விரோத குழுக்களே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மைய தலைமை நிா்வாக அதிகாரி ராஜேஷ் குமாா் கூறினாா்.

கம்போடியா, மியான்மா், லாவோஸ் உள்ளிட்ட சில தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் குழுக்களால் இந்தியாவில் நிதி இழப்பை சந்திக்கும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவா் கூறினாா்.

மேலும், ‘தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உயா் அதிகாரம் கொண்ட மத்திய அமைச்சகங்கள் குழுவை கடந்த மே 16-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.

போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள், குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முடியும் போன்ற வாக்குறுதிகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

கம்போடியாவில் சிக்கியுள்ள இந்தியா்கள் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்கு ஏற்கெனவே 360 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவா்களை மீட்க கம்போடியா அரசுடன் இந்திய அரசு தொடா்பில் இருந்து வருகிறது’ என்றாா் ராஜேஷ் குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.