எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி!

ராஜ்கோட் தீ விபத்தில் புதுமணத் தம்பதி உள்பட 28 பேர் உடல் கருகி பலியாகினர்.

News image

புதுமணத் தம்பதி அக்‌ஷய் டோலரியா, அவரது மனைவி கியாதி.

Updated On :27 மே 2024, 4:00 pm IST

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் புதுமணத் தம்பதி, மணமகளின் தங்கை உள்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருமணத்துக்குப் பிறகு புதுமணத் தம்பதிகளான அக்‌ஷய் டோலாரியா, அவரது மனைவி கியாதி, கியாதியின் தங்கை ஹரிதா ஆகியோர் ராஜ்கோட்டின் விளையாட்டு மையத்திற்குச் சென்றனர். அப்போது அந்த விளையாட்டு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ பரவியது.

கனடாவில் படித்துவந்த அக்‌ஷய் (24), 20 வயதான கியாதியை திருமணம் செய்ய ராஜ்கோட் வந்துள்ளார். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சார் பதிவாளர் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,” அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு தீ விபத்தில் எரிந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக அக்‌ஷய்யின் உடல் அவர் அணிந்திருந்த மோதிரத்தின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டது. அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த கியாதி, ஹரிதாவின் பெற்றோரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

வெறும் ரூ.99 டிக்கெட்டுகளுடன் வார இறுதி சலுகையால் விளையாட்டு மையம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், விபத்துக்கான காரணம் ஆய்வுக்கு பிறகே தெரியவரும். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது பலியான 28 பேரில் 4 பேர் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள். இந்த சம்பவத்திற்குப் பிறகு, விளையாட்டு மையத்தின் உரிமையாளரும், மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

அதே நேரத்தில் மாநில அரசு விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்துள்ளது.

தீயணைப்புக்கான தடையில்லா சான்றிதழ் இல்லாமல் கேளிக்கை மையம் இயங்கி வந்ததாகவும், ஒரே ஒரு வெளியேறும் வழி இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி சனிக்கிழமை கேட்டறிந்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.