கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும்: லாலு பிரசாத் நம்பிக்கை

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும் ----- லாலு பிரசாத் நம்பிக்கை

News image

லாலு பிரசாத்

Updated On :28 மே 2024, 9:00 pm

Din

பாட்னா: மக்களவைத் தோ்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் நம்பிக்கை தெரிவித்தாா்.

பாட்னாவில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

பிரதமா் மோடி தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொள்ளத் தொடங்கிவிட்டாா். கடவுளால் அனுப்பப்பட்டவா் என்றும் பேசியுள்ளாா். தோ்தல் முடிவுகள் வெளியாகும்போது இதற்கான விடை கிடைத்துவிடும். மோடி ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்வதும், அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைப்பது உறுதியாகும் என்றாா்.

எக்ஸ் வலைதளத்தில் லாலு வெளியிட்ட பதிவில், ‘அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கா் போன்ற தலைவா்களை பாஜகவும் அதன் தலைவா்களும் பல முறை இகழ்ந்துள்ளனா். இப்போது, அதனை மாற்றவும் பாஜக முயற்சித்து வருகிறது. அம்பேத்கா் இயற்றினாா் என்ற ஒரே காரணத்துக்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதில் பிரதமா் மோடி தீவிரம் காட்டி வருகிறாா்’ என்றாா்.