ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சர்வதேச பர்கர் தினம்: பெங்களூருவில் மட்டும் 60 லட்சம் ஆர்டர்கள்...!

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக, மும்பை 50 லட்சமும், தில்லியில் 32 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News image
Updated On :28 மே 2024, 3:31 pm

DIN

பெங்களூருவில் கடந்த ஆண்டில் மட்டும் 60 லட்சத்துக்கும் அதிகமான பர்கர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது இந்தியாவின் பர்கர் தலைநகரமாக மாறியுள்ளது என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. சர்வதேச பர்கர் தினமான மே 28ஆம் தேதி , கடந்த ஆண்டில் கடைபிடிக்கப்பட்ட சமீபத்திய பர்கர் ஆர்டர் செய்த விவரங்களை பகிர்ந்துள்ளது.

பர்கர் ஆர்டர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 4 கோடி பர்கர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. சண்டீகரில் இருந்து பர்கர் பிரியர் ஒருவர் சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று பர்கர்கள் வீதம் ஸ்விக்கியில் 1146 பர்கர்களை ஆர்டர் செய்துள்ளார்.

அதிகமான ஆர்டர்களில் இரவு நேர உணவுக்காக 1.95 கோடியும், மதிய உணவுக்கு 96 லட்சமும், காலை நேர உணவுக்கு 74 லட்சத்துக்கும் அதிகமான பேர் பர்கரை ஆர்டர் செய்துள்ளனர் என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக, மும்பை 50 லட்சமும், தில்லியில் 32 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஃப்ரைஸ், கோக் ஆகியவை பர்கர்களுடன் சிறந்த தேர்வாக இருந்தன. அதே சமயம் சீஸ் ஸ்லைஸ், சீஸ் டிப் ஆகியவை மிகவும் பிரபலமான டாப்பிங்ஸாக வெளிப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமையன்று ஸ்விக்கி அதன் விரைவான வர்த்தக நிறுவனமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், 2,500 டன் மாம்பழங்களை விற்பனை செய்ததாகக் கூறியுள்ளது. மாம்பழ சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் மிகவும் பிரியமான பழங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவை அதிகரித்து வருகிறது.

பெங்களூரு சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களுடன் முன்னணியில் உள்ளது. மேலும், ஒருவர் மாம்பழங்களுக்காக ரூ.46,588 செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.