அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மிஸோரத்தில் கனமழை: 15 பேர் பலி, இயல்பு வாழ்க்கை முடக்கம்!

கல் குவாரியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

News image
- படம் | பிடிஐ
Updated On :28 மே 2024, 7:52 am

DIN

வடகிழக்கு மாநிலமான மிஸோரத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனிடையே, தலைநகர் அய்ஸால் அருகே உள்ள ஒரு கல் குவாரியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதையடுத்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதோடு, அரசுப் பணியாளர்களும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஹந்தர் அருகே, அய்ஸாலுக்கு செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு சலைகளிலும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஞாயிறன்று இரவு - மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ‘ரீமெல்’ புயலின் தாக்கத்தால், வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்துள்ளது.

தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரு நாள்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.