தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

”ஜூன் 4-ஆம் தேதிக்கு பின் அரசியலில் பெரும் புயல் வீசப் போகிறது.”
தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி
படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளில் பெரும் பிரிவினை ஏற்படுமென பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஒடிஸாவின் கேந்திரபாறாவில் இன்று(மே 29) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “ஜூன் 4க்கு பின், ஆறே மாதங்களில் நாட்டின் வளர்ச்சி புதுவிதமான வேகத்தை எட்டும்.

மறுபுறம், இந்த 6 மாதங்களில் அரசியலில் பெரும் புயல் வீசப் போகிறது. குடும்ப கட்சி நடத்தும் தலைவர்கள் மீது அக்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக, குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகளில் பிரிவினை ஏற்படும்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

படம் | ஏஎன்ஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com