உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஜூன் மாதத்தில் இத்தனை நாள்கள் வங்கிகள் இயங்காதா?

ஜூன் மாதத்தில் 10 நாள்கள் வங்கிகள் இயங்காது

News image

மாதிரி படம் - Pixabay

Updated On :29 மே 2024, 6:24 pm IST

ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான விடுமுறை நாள்கள் குறித்த அறிவிப்பின்படி ஜூன் மாதத்தில் 10 நாள்கள் வங்கிகள் இயங்காது.

மாநிலங்களுக்கான பிரத்யேக விடுமுறைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட 10 நாள்கள் இந்த மாதத்தில் விடுமுறை நாள்களாக உள்ளன.

மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின்படி மத்திய ரிசர்வ் வங்கி ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கான விடுமுறை மற்றும் வங்கிகள் கணக்கு முடிக்கும் நாள்கள் ஆகியவற்றுக்காக விடுமுறை நாள்களை வரையறுக்கிறது. அதன்படி ஜூன் மாதத்தில் விடுமுறை நாள்கள் ( சில விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும்) பின்வருமாறு:

ஜூன் 1: சிம்லாவில் உள்ள வங்கிகள் தேர்தலின் இறுதி கட்டம் என்பதால் இயங்காது

ஜூன் 15: மிசோரம் மற்றும் ஒடிசாவில் பிராந்திய விழாக்களை முன்னிட்டு வங்கிகளுக்கான விடுமுறை நாள்

ஜூன் 17: இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் பக்ரீத் முன்னிட்டு விடுமுறை (மிசோரம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் தவிர)

ஜூன் 18: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பக்ரீத் முன்னிட்டு விடுமுறை

இவை தவிர்த்து பின்வரும் வார இறுதி நாள்களில் வங்கிகள் இயங்காது.

ஜூன் 8: இரண்டாவது சனிக்கிழமை

ஜூன் 9,16: ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 22: நான்காவது சனிக்கிழமை

ஜூன் 23,30: ஞாயிற்றுக்கிழமைகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.