தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கேரளத்தில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை..!

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது.

News image
- படம் | ஏஎன்ஐ
Updated On :29 மே 2024, 4:37 pm

DIN

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, ஜூன் 8-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், நிகழாண்டு மே.30-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

கடந்த ஒரு வாரமாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் சாலைகளையும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.