சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை யாரும் ஏற்க மாட்டார்கள்: ம.பி. முதல்வர்

நம் கண் முன்னே உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது.

News image
Updated On :29 மே 2024, 9:25 am

மத ரீதியிலான இடஒதுக்கீடு தவறானது என்பதால் அதை யாரும் ஏற்க மாட்டார்கள் என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது ம.பி.முதல்வர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மை சமூகங்களின் குறிப்பிட்ட பிரிவினருக்கு சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியதாகக் கூறியது, மதத்தின் அடிப்படையில் அல்ல.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் தனது நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கத் தொடங்கினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஓபிசி இடஒதுக்கீடு விஷயத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் எங்கள் நிலைபாடு அதுவாகவே இருக்கும்.

மதத்தின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு வழங்கினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அது நடக்கக்கூடாது. இது காங்கிரஸின் கொள்ளை மற்றும் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்பட்டுள்ளது.

நாட்டில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு இடமில்லை என பாபாசாகேப் அம்பேத்கர் கூறியிருந்தார், ஆனால் காங்கிரஸ் அதை ஆதரிக்கிறது. மம்தாவும் அதற்கு ஆதரவான கருத்துகளைக் கூறி வருகிறார். அதற்கு அவர்கள் தக்க பதில் கொடுத்தேயாக வேண்டும். நம் கண் முன்னே உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.